Pages

Saturday, May 12, 2012

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

பெரும்பாலான தமிழர்களுக்கு நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜேஷ்குமார். அடுத்து சுபா,இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன் என பலரும் அடுத்த நிலை. 

இதில் நான் அதிகம் படித்தது ராஜேஷ்குமார் நாவல்களை. அடுத்து இந்திரா சௌந்தர்ராஜன் இவரது நாவல்கள் பெரும்பாலும் அமானுஷ்யம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலையில் நான் புதியதாக ஒன்றை படிக்க நினைத்த போது கண்ணில் பட்ட பெயர் தான் "எண்டமூரி வீரேந்திர நாத்". 



தொடர்ந்து லிங்குசாமி, விஜய் படங்களையே பார்த்தவனுக்கு மணிரத்னம், கமல் படங்களை பார்த்தால் எப்படி இருக்கும்? சும்மா ஜிவ்வுன்னு ஏறும்ல அதான், அதேதான். 

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கில் எழுதப்பட்ட இவரது பெரும்பான்மையான நாவல்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. நிறைய மொழிபெயர்ப்பு செய்தவர் கெளரி கிருபானந்தன்

நான் முதலில் படித்த நாவல் "துளசி தளம்", அமானுஷ்யம், அறிவியல் என கலந்து எழுதி இருப்பார், ஒரே நாளில் படித்து விட்டேன், அடுத்து "மீண்டும் துளசி" இது முந்தைய நாவலின் இரண்டாம் பாகம். முதலாவதை விட இது மிகவும் அருமை. 

தொடர்ந்து சாகர சங்கமம், அந்தர் முகம், பணம் மைனஸ் பணம், நிகிதா, 13-14-15, பட்டிக்காட்டு கிருஷ்ணன், பிரளயம், தளபதி, தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் (சிறுகதை தொகுப்பு),  தூக்கு தண்டனை,பர்ண சாலை என பல நாவல்களை படித்தேன். ஒரு முறை, இரு முறை அல்ல. குறைந்த பட்சம் மூன்று நான்கு முறை. ஆம் ஒரு படம் போல கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி இருப்பார். பல நேரங்களில் படங்கள் கூட இதனை சொதப்பி விடும். 

ஆனால் இவர் மொத்தம் மொத்தம் 50 நாவல்கள் எழுதி இருக்க, நான் அதில் பாதியை கூட படிக்க வில்லை. ஏன் என்றால் எங்கள் ஊர் நூலகத்தில் மட்டுமே கிடைத்தன அவை.  நிறைய இணைய நண்பர்கள் கூட இதே நிலையில் இருந்தனர். 

ஒரு நாள் வலைமனை சுகுமார் சுவாமிநாதன் அவர்களின் எண்டமூரி வீரேந்திரநாத் பற்றிய பதிவை படித்து விட்டு, அவரிடம் இது குறித்து கேட்ட போது நூலகத்தில் தான் அவரும் படித்ததாக கூறினார். ஆனாலும் இணையத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து என் முயற்சிகள் தொடர, திடீரென ஒரு தளத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை கண்டேன். கலிங்கபட்டில இருந்தவனுக்கு கலிபோர்னியாவுக்கு இலவச டிக்கெட் கிடைத்தால் எப்படி குதிப்பான், அப்படி தான் குதித்தேன் நானும். 

நான் மட்டும் குதித்தால் போதுமா? எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அனைத்து ரசிகர்களும் குதிக்க, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நான் கண்டெடுத்த அனைத்தின் இணைப்பும் உங்களுக்கு தருகிறேன். 

இவை அனைத்தையும் Upload செய்த நண்பரும் நூலகத்தில் இருந்தே ஸ்கேன் செய்து இருக்கிறார். இதற்கு Copyright பிரச்சினை இருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், மழை நீரை குடிக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? என்ஜாய்...... 

அத்தோடு ஒரு முக்கிய விஷயம், இவரது நாவல்களை எங்கேனும் வாங்க முடியும் என்றால் அதை இங்கே தெரிவிக்கவும். இரண்டே நாவல்கள் மட்டுமே  விலைக்கு நான் வாங்கி உள்ளேன். மற்றவை இணையத்தில் வாங்க முடியவில்லை. கொரியர், VPP என்று எதன் மூலம் வாங்க முடியும் என்றாலும் சொல்லுங்கள். என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிக்கிற சுகமே தனி அல்லவா?

சமீபத்தில் NHM தளத்தில் சில புத்தகங்கள் வந்துள்ளன. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம் - எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

கார்த்திகை தீபம - http://www.mediafire.com/?gh36hta5jvdogdl

ராஜமுத்திரை - http://www.mediafire.com/?ye4ux49mjz9dukn 

வஜ்ர கவசம் - http://www.mediafire.com/?f0qdbbt9e9c8gq9 

வாழ்க்கைப் படகு - http://www.mediafire.com/?4llft866c8asmfg

காதல் செக் - http://www.mediafire.com/?622vc3f589g8q9m

பதியன் ரோஜா - http://www.mediafire.com/?pcxbbqucfcr44ie

புஷ்பாஞ்சலி - http://www.mediafire.com/?965m3dg54cgqd7q

தளபதி - http://www.mediafire.com/?9u9yyl0b1g5ftfu

வெள்ளை ரோஜா - http://www.mediafire.com/?nv62rg0zy2d1022

காகித பொம்மை - http://www.mediafire.com/?vmxx9kilxlm74t6

பணம் மைனஸ் பணம் - http://www.mediafire.com/?i4i32bfdooe1ob2

காதலிக்கிறாள் சரிதா - http://www.mediafire.com/download.php?3x34tab8iavx3tt

Black Master - http://www.mediafire.com/?q8d6iy3wiw5jzp7

தர்மாத்மா - http://www.mediafire.com/download.php?ubd6fftpa26t2do

நாட்டிய தாரா - http://www.mediafire.com/?1gu86h9lyk53mx2

லேடீஸ் ஹாஸ்டல் - http://www.mediafire.com/download.php?y27z8ykk56ihaqd

Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9 விமர்சனம்

ஒரு படத்துக்கு என்ன தேவை என்பது ஒரு இயக்குனர் தீர்மானிப்பது. அந்த தீர்மானம் எப்படி என்பதை பொறுத்து அந்தப் படத்தின் வெற்றி அமையும். வெற்றி என்பது இங்கே நூறு நாள் ஒடுவதோ இல்லை விருது வாங்குவதோ இல்லை. பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும், என்ன படம்டா இது என்று எண்ண வைக்கும் ஒன்றே வெற்றிப் படம். அந்த வரிசையில் வருவது தான் பாலாஜி சக்திவேல் அவர்களின் வழக்கு எண் 18/9.



ஒரு பெண்ணின் மீது திராவகம் வீசப்படுகிறது. யார் அதை செய்தது? காரணம் என்ன? . இந்த ஒரு வரி தான் கதை. அதை அவர் எடுத்த விதம் தான் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. 

ஆரம்பத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தின் கதையை சொல்லும் படம், இரண்டாம் பாகத்தில் திராவகம் வீசப்பட்ட ஜோதியின் வீட்டு ஓனரின் மகள் பார்வையில் வழக்கை சொல்கிறது. 

முதலாவதில் விளிம்பு நிலை மனிதர்களின் பரிவு, நேர்மை, மானம் குறித்து பேசும் படம், இரண்டாம் பகுதியில் பணக்கார மனிதர்களின் அலட்டல், குழந்தைகள் மீது கவனமின்மை, அதிகார துஸ்பிரயோகம், காமம் என்று விரிகிறது. 

விளிம்பு நிலை மனிதர்கள் வரும் பகுதி முழுக்க மனதை வருடிச் செல்கிறது 
கதை. ரியல் எஸ்டேட்க்கு பலியாகும் கிராமங்கள், வடநாட்டிற்கு விற்கப்படும் சிறுவர்கள், விபச்சார பெண்கள் என்று இன்னும் பல உண்மைகளை சொல்கிறது. சில கதையில் ஒட்டாத போதும், கதைக்கு உறுத்தாத விதத்தில் சேர்த்து இருப்பது இயக்குனரின் திறமை.

பின் பாதியில் பணக்கார பிள்ளைகளின் சல்லாபம், பெற்றோரின் அலட்சியம் என்ற இரண்டையும் மிக அழுத்தமாக பதிந்து இருக்கிறது. மிக அருமையான பார்வை.

இறுதியில் ஆசிட்டால் மாற்றம் அடைந்த முகத்தை பார்த்தும், நான் உனக்காக காத்திருப்பேன் என்று வேலு சொல்லும் காட்சியை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை.

வேலுவாக நடித்த ஸ்ரீ, சின்னசாமி, அதிகம் பேசாத ஊர்மிளா மகந்தா(ஜோதி) என மூவரின் நடிப்பும் அருமை. மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களும் ஏனோ மனதை ஈர்க்கவில்லை. ஒரு வேலை அவர்கள் காதபாத்திர அமைப்பு காரணமாய் இருக்கலாம்.  சில நிமிடம் மட்டுமே வரும் ரீடேக் ஹீரோ நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் கேமரா தான். கேமராவின் அந்த அசைவுகள், அட அட விஜய் மில்டன் அசத்தி விட்டார். படத்தில் பெரும்பாலான இடங்களில் கேமராவும் ஒரு கதாபாத்திரமாய் இருக்கிறது.

அடுத்து இசை. பிரசன்னாவின் இசை, கதைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் மென்மையாய் இருக்கிறது.

குறிப்பாக "ஒரு குரல் கேட்குதே" பாடலுக்கு இவரின் உழைப்பு ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இந்த பாடலுக்கு மட்டும் அர்ஜென்டினா பாடகர் சோஃபியா டோசெல்லோ, வெனிசுலாவின் கிட்டாரிஸ்ட் (Cuatro Player) ஜுனாஞ்சோ ஹெரேரா, அமெரிக்க பியானிஸ்ட் விக்டர் குட், அர்ஜென்டினாவின் பேஸிசிஸ்ட் ரோட்மிஸ்ட்ரோவிஸ்கி, ஹங்கேரி நாட்டு பிரன்க் நேமெத் (டிரம்மர்), இந்திய புல்லாங்குழல் கலைஞர் கமலாகர் மற்றும் பிரசன்னா. இத்தனையும் சேர்த்து கார்த்திக்கின் ஒரு குரலில் இந்தப் பாடலை கேட்கும் போது...... அட அட அட. பாட்ட கேளுங்க நீங்க அப்புறம் சொல்லுங்க. (நன்றி - தி ஹிந்து)

ஒரு குரல் கேட்குது

அடுத்து இசையே இல்லாமல் இருக்கும் "வானத்தையே எட்டிப் புடிப்பேன்" மிக அருமை.

அருமையான படத்துக்கு மிக அருமையாக எடிட்டிங் செய்து இருக்கிறார் கோபி கிருஷ்ணா.