Pages

Wednesday, December 28, 2011

தமிழ்ப் படம்



மும்பை நடிகையுடன் 
ஜெர்மனியில் டூயட் ,
கேரள நண்பனுடன் 
பெங்களூரில் கொண்டாட்டம் ,
டெல்லி வில்லனை 
உலக மக்களை காக்க ,
கொல்கத்தாவில் கொன்றதில் 
தமிழன் செத்தே போனான் .


இ(செ)யற்கை

காடுகளை அழித்த 
நகரத்தில் பார்க் !

அருவி இருந்த இடத்தில் 
தீம் பார்க் !

ஆறு இருந்த இடத்தில் 
 சாக்கடை !

மரங்களை வெட்டி 
மலர்ந்த வீட்டில் 
சீனரி ஓவியம் !

நடக்க முடிகிற இடத்துக்கும் 
நான்கு சக்கர வாகனம் !

நேரில் பேசக் கூடிய 
தொலைவுக்கும் அலைபேசி 

இருப்பதை எல்லாம் 
அழித்து விட்டு 
உருவானது செயற்கை !

இருந்த இடமே தெரியாமல் 
அழித்து விட்டு 
உருவாகும் இயற்கை !









Friday, December 23, 2011

அது இது எது - 04


 016

பாட்டியிடம் ஆசீர்வாதம் 
வாங்கிக்கோ - பையனிடம் 
பையன் சொன்னான் 
நல்லா இரு பாட்டி 

017

 குடி குடியை 
கெடுக்கும் என்றேன் 
அதனாலதான் டைவர்ஸ் 
பண்ணிட்டேன் ஸார்
எதிர்த்த டேபிள்காரன்

018

நாற்காலிக்கு மதிப்பிருந்தால் 
நண்பனும், துரோகி 
ஆகிறான்

019

வீட்டில் பிரச்சினை 
என்றாலும் மன்மோகன்
வெளிநாட்டுக்குதான்

020 

ஃபேர்& லவ்லி போட்டால் 
பாட்டு வரும் ,
விவல் போட்டால் 
பட்டம் வரும் 
புத்திசாலிகளின் புது 
முயற்சி

021 

பத்துக் கிருமிகளினால்
தொல்லையில்லை 
பதினோராவது கிருமி போல 
காலையில் இருந்து
காய்ச்சல் சளி.
022

"பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல் 
வாய்ப்பூசு கைகழுவு "
சாட்டிலைட் தொலைக்காட்சி 
சட்னி,இட்லியுடன் 
பொங்கல்

023
"2041 இல் நான் 
முதல்வரானால் "
பள்ளிக் கட்டுரையில்  
அரசியல்வாதி மகன் 
024
"பள்ளிக் குழந்தைகளுக்கு 
காலை உணவு"
அரசு ஊட்டிவிடும் !
"புதிய எலைட் 
பார்கள் திறப்பு"
அரசு ஊற்றியும் கொடுக்கும் !!

025

மூணு புள்ளி ...
ஒரு ஆச்சர்யகுறி !
முடிந்தது கவிதை ...!

Friday, December 16, 2011

அது இது எது - 03

09

இன்னும் தூங்கலியா?
தூங்காத அம்மாவின்
கேள்வி

---

10

நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
---
11

உரம் போட்டு போட்டு 
பயிர் விளைந்தது 
நிலம் அழிந்தது. 

--

12
கெமிஸ்ட்ரி புக்கில்
மானாட மயிலாட 
சேர்க்காமல் விட்டது 
கலைஞரின் மறதி !

 ---
13

 தாத்தா செத்த பின் 
திண்ணையும் செத்தது 
---
14

எழவுக்கோ தேவைக்கோ 
போகாமல் விட்டால் 
செத்தவனைத் தவிர 
மற்றவன் பேசுவதில்லை

---

15

சத்தியமா சொல்றேன்...
பெரும்பாலான பொய்களின்
தொடக்கம்

Thursday, December 15, 2011

அது இது எது - 02

3.

இல்லை என்பவர்களின்
கண்ணில் தெரிகிறது
இருக்கிறது என்ற பதில்

---
4.

செத்துப் போனவன்
கண்ணில் இன்னும்
சாகாத ஆசைகள்

---
5.

நாளை முடிக்க
வேண்டியது
நாளை மறுநாள்
நேற்றாகிவிடும்

---
6.

இணையத்தால் இழந்தது
பக்கத்து வீட்டுக்காரர்களை

---
7.

கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
வேற்றுமையில் ஒற்றுமை
எல்லோருக்குள்ளும்
சண்டை

---
8.

ஆறு மாசத்துக்கு
ஒரு முறை
அன்னா ஹசாரே
உண்ணாவிரதம்.
அடிக்கடி இருக்கிறாள்
அம்மா

---

Tuesday, December 13, 2011

அது இது எது - 01

1.

செய்த தவறுகளுக்கு
ஒவ்வொரு உறுப்பையும் 
சிதைக்கப் போகிறோம் 
.
.
பிறப்புறுப்பை மட்டும் வேண்டாமே
அடுத்த தவறு செய்ய வேண்டும் 

-----
2.

ஒவ்வொரு தவறுக்கும்
ஒரு உறுப்பை
எடுத்தனர் 
ஒன்றுவிடாமல் எடுத்தபின் 
ஒவ்வொன்றாய் 
எட்டிப் பார்க்கின்றன
மிச்ச தவறுகள் 


Monday, December 5, 2011

குடிமகன்


வயிறு முட்டக் குடிப்பவன்
வாழைப் பழம் 
இரண்டு ரூபாய் என்றால்
இருபது நிமிடம் 
பேரம் பேசுகிறான்.

Sunday, December 4, 2011

அர்த்தம்

தெருவில் கிடக்கும் 
குடிக்காரனைத் திட்டிவிட்டு
குப்பையை அருகில் 
கொட்டிச் சென்றால்,
இந்த சமுதாயத்தின் 
மேலுனக்கு அக்கறை
என்று அர்த்தம்.

சாலையில் அடிபட்டு 
சாகக் கிடக்கும் 
முதியவரைப் பார்த்து 
"ச்சச்சோ" என்றால்,
நீ இரக்கமுள்ளவன்
என்று அர்த்தம்.

நடிகையின் மார்பை
நன்றாய் காட்டிவிட்டு 
ரசிகனின் பார்வையில் 
தவறென்று சொன்னால்,
நீ கலைஞன் 
என்று அர்த்தம்.



Monday, November 7, 2011

என் காதல் ஸ்டேட்டஸ்

Facebook, Twitter, Buzz, & My Gmail Status. போன்றவற்றில் பகிர்ந்த காதல் பற்றிய பகிர்வுகள். 

இவை எல்லாம் கவிதையா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வேன்.


  • இல்லாததை சொல்லிச் சொல்லி உன்னை வர்ணித்து இருப்பவை எல்லாம் சண்டையிடுகின்றன நீயாய் இருக்க..

  • ஒரு வார்த்தையில் கவிதை கேட்டாள் நீ என்றேன், பொய் என்றாள்; நான் என்றேன், அய் என்றாள்; நாம் என்றேன், மெய் என்றாள்!

  • சிலருக்கு உன்னைப் பிடிக்கும்; சிலருக்கு உன்னையும் பிடிக்கும்; எனக்கு உன்னை மட்டுமே பிடிக்கும். ! 

  • என்னை போன்ற பெண்களை பார்த்தால் என்ன செய்வாய் என்று கேட்டாள், கண்ணாடி இல்லாவிட்டால் நீயென் நினைவில், இருந்தால் உன் தங்கை என்றேன் !! ச்சீ போடா என்றாள் !! # டபுள் டமாக்கா

  • என்னைக் கேட்டுதான் எல்லாம் சொல்வேன் என்றாள். யாரைக் கேட்டுச் சொன்னாள், என்னைப் பிடிக்காதென?

  • கனவில் கூட உன்னைப் பிரிய விரும்பவில்லை...... அதனால்தானோ கனவில் மட்டுமே நீ என்னுடன்.

  • நீ வந்தவுடன் உன்னுடன் பேசுகிறேன். நீ வரும்முன் நம்முடன் பேசினேன்.

  • உன் புரிதலுக்காகவே என் கவிதைகள்... ஆனால் உன்னைத் தவிர அனைவருக்கும் புரிகிறது.

  • அவ்வப்போது கொஞ்சம் சிரி. என் ஆயுள் வளர.

  • நீ வரும் வரை பூமிக்கு நிலவொளி, நீ வந்த உடன் நிலவுக்கு நீ தான் ஒளி

  • சில அழகான கவிதைகளை இன்னும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. உன்னையும் சேர்த்துதான்.

  • எவ்வளவு காதலிக்கிறாய் என்றாள், கன்னத்தில் கொடுத்தேன் முத்தம். இவ்வளவுதான் காதலிக்கிறாயா என்கிறாள்!

  • ஒரே காதல் தான் உனக்கு தென்றலாகவும், எனக்கு புயலாகவும். முடிவில் நீ சிரித்திருக்கிறாய், நான் சிதைந்திருக்கிறேன்.

  • யாருக்கு உன் கவிதைகள் என கேள்விகள் நிறைய. காதலி(க்க) தெரிந்திருந்தால் காதலித்து இருப்பேனே? தெரியாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

    Friday, September 30, 2011

    புரிந்தது !

    மாடர்ன் கவிதையென்றால் -எளிதில்
    எவர்க்கும் புரியக்கூடாதாம்
    எழுதிவிட்டுப் பார்த்தேன்
    எனக்கே புரியவில்லை!

    Thursday, September 29, 2011

    என்னம்மா வேணும் செல்லம்?


    என்னம்மா வேணும் செல்லம்? 
    டெடிபியர் வேணுமா?
    டோரா வேணுமா? 
    நூடுல்ஸ் வேணுமா? 
    ஜூஸ் வேணுமா? 
    கன் வேணுமா? 
    வீடியோ கேம் தரட்டா? 
    புதுடிரஸ் போட்டுகிறியா? 
    கடைசி வரை -சொல்லவிடவே 
    இல்லை குழந்தையை 
    அன்புதான் வேண்டுமென்று !

    Thursday, September 22, 2011

    நானும் இந்தியன்தானே !!


    எல்லோரும் அண்ணாவை ஆதரித்தார்கள் 
    நானும் ஆதரித்தேன்! 
    எல்லோரும் அணு உலையை எதிர்க்கிறார்கள் 
    நானும் எதிர்க்கிறேன் ! 
    எல்லோருக்கும் மங்காத்தா சூப்பர் 
    எனக்கும் சூப்பர் ! 
    எல்லோரும் தூக்கு வேணாம்னாங்க 
    நானும் வேணாம்னேன் ! 
    எல்லோரும் சும்மா இருக்க 
    நானும் சும்மா இருக்கேன் ! 
     ஏன் என்ற கேள்வி 
    எல்லாம் கிடையாது
    என்ன செய்ய 
    நானும் இந்தியன்தானே !!

    Tuesday, August 16, 2011

    இந்தச் சுதந்திரம் இனிப்பாய் இல்லை

    கண்ணாடி அணிந்த மனிதர்
    காலாற நடக்க ஆரம்பித்தார்
    கையில் ஒரு தடி- அங்கத்தில்
    உடை ஒரு அடி
    ஆம் மகான் காந்தி
              மகாத்மா காந்தி
    மறுபடி வந்தார் இங்கு - ஒரு
    கையில் மிட்டாய் பையுடன்
    மறு கையில் தேசியக் கொடியுடன்
    சுதந்திர தினத்துக்கு ............

    முதலில் கண்டது
    முதுகு முழுவதும் பையுடன்
    ஒரு சிறுவன்
    who are you old man?
    என்றான் தலை நிமிர்ந்து - நான்
    காந்தி என்றார் தலை குனிந்து

    what is the matter?
    why you giving chocolates?
    இது சிறுவன்
    சுதந்திர தினமின்று - இது காந்தி
    Last year we celebrated it on August 13
    Why Now August 15th?
    அதிர்ந்தார் மகான்

    அடுத்தபடியாய் காந்தி கண்டது
    நாட்டின் "குடிமகனை"
    யார் நீ என்றதற்கு 
    தேசத்தின் தந்தை என்றார்
    தேசம் ஆணா ? பெண்ணா?
    தெளிவாய் கேட்டான் குடிமகன்
    கூடவே தேசியக்கொடி கண்டு
    எந்தக் கட்சி நீ?
    என்பதையும் சேர்த்து
    அதிர்ந்து போன காந்தி
    தேசியக்கொடியப்பா என்றார்.

    ஆமா கையிலென்ன புட்டி
    விளக்குக்கு எண்ணெயா ?
    யோவ் விளக்கெண்ணெய்
    இது எனக்கு எண்ணெய்
    அப்படியென்றால் ?- காந்தியிது
    பீர்... ம்..... சரக்கு... ஆங் .. மது
    அப்போ மதுவிலக்கு ? இதுவும் காந்தி
    உம்ம மரணத்தோடவே
    அத விலக்கியாச்சு
    என்றபடியே எடுத்தான் வாந்தி

    அயர்ந்து போன காந்தி
    மீண்டு நடக்கலானார்
    இந்த முறை கண்டது
    வெள்ளுடுப்பு அரசியல்வாதி
    குடியரசு தின வாழ்த்துகள் கூறி
    லட்டு நீட்டினார்
    குற்றுயிரானார் காந்தி

    கொளுத்தும் வெயிலில்
    கொஞ்சம் அமர இடம்தேடி
    அவரது சிலைக்கடியில்
    செருப்பு தைக்கும் புனிதன்
    அருகில் அமர்ந்து
    நாட்டுநடப்பைக் கேட்டார் ...

    ஆண்டுக்கு ஐந்து திட்டம்
    அதில் ஆயிரம் ஊழல்
    இன்றைய அரசியல்வாதி !

    குண்டுவெடிப்புக்கு வருந்தாதவன்
    இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு
    அழுகின்றான் - இன்றைய இளைஞன் !

    20 வயது கற்ப்பழிப்புக்கு
    60 வயதில் தீர்ப்புக்கு காத்திருக்கிறான்
    இன்றைய இந்தியன்!

    முன்னால் சிரிக்கிறான்
    முதுகில் குத்துகிறான்
    வெளிநாட்டுத் தலைவராம்!

    எல்லோரும் வாழ்வது
    உமக்காக காந்தி
    நீ சிரிக்கும்
    நோட்டுக்காக !

    முடித்த போது,
    தேசியக்கொடி குத்திய
    குழந்தையொன்று
    மிட்டாய் கொடுத்தது மகானுக்கு
    வாயில் போட்ட மிட்டாய்
    இனிக்கவே இல்லை
    நாம் உணராத
    சுதந்திரம் போல

    Wednesday, July 13, 2011

    மாதத்தின் 32-ஆவது நாள்

    பள்ளிக்கூடத்துக்கு போன பையன்
    திரும்பிடுவானா? - இல்லை
    பழம் பொறுக்கினான்னு
    சுட்டுடுவாங்களா? - அம்மா

    எம்புள்ளைய எப்புடியாவது
    ஒரு லட்சம் செலவு பண்ணி
    எல்‌கே‌ஜி சேத்துடணும் - அப்பா

    இருக்கிற பணத்துல இன்னும்
    ஒரு வாரத்த ஓட்டணும் - பேச்சுலர்

    எப்புடியாவது அந்த பஸ்ஸ்டாண்ட்
    பொண்ண நாளைக்கு மடக்கிடனும்- ரோமியோ

    இந்த ஆடித்தள்ளுபடில நாலு
    புடவை எடுக்கணும் -பெண்கள்

    இந்த பெட்ரோல், டீசலுக்கு எல்லாம்
    தள்ளுபடி இல்லையா? - ஆண்கள்

    இந்த டிகிரி படிச்சதுக்கு பேசாம
    _______ மேச்சுருக்கலாம் - பட்டதாரி

    எப்புடியாவது இதவிட அதிக
    சம்பளத்துக்கு மாறிடனும் - ஐ‌டி பணியாளன்

    கடவுளே அடுத்த சி‌டியோ, புதையலோ
    வெளிவராம பாத்துக்கோ - மாடர்ன் சாமியார்

    அம்மா, தாயே வாழ்க்கைல
    திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி

    .
    .
    .
    .
    .
    .
    .
    ஆக மொத்ததில் எல்லா மனிதர்களும்
    கவலையின்றி இருப்பது
    வாரத்தின் எட்டாம் நாளும்,
    மாதத்தின் 32-ஆவது நாள் மட்டுமே !!!



    Monday, May 2, 2011

    இப்படிக்கு காதலன்


    காலம் முழுவதும்
    காதலிக்க நேரமில்லை
    அதனால்தான் தினமும்,
    காலையிலிருந்து மாலைவரையும்,
    மாலையிலிருந்து காலைவரையும்,
    காதலிக்கிறேன்!!!



    கொஞ்சமாய் சிரித்தாள்;
    கொஞ்சமாய் அழுதாள்;
    கொஞ்சமாய் அடித்தாள்;
    கொஞ்சமாய் அணைத்தாள்;
    கொஞ்சமாய் இனித்தாள்;
    கொஞ்சமாய் கசந்தாள்;
    மொத்தமாய்.....................
    ........................... காதலித்தாள்;
    அதனாலேயே
    அவள் பெயர் காதலி !!!!



    படிக்கக் கூடுவதால்
    பள்ளிக்கூடம்;
    படித்தவுடன் கூடுவதால்
    பள்ளியறை ;


    காதலித்து காதலித்து
    களைப்பானேன்
    காதல் உன் மீதென்பதால்
    களைப்பும்
    களைப்பானது !!!

    மலர் கண்காட்சி
    பக்கம் போகாதே
    வண்ண மலர்களை
    விடுத்து- உன்
    கன்ன மலர்களை
    மொய்க்கத் தொடங்கிவிடும்
    வண்ணத்துப்பூச்சிகள்!!!


    _கி.பி


    நண்பர்களே புது டெம்ப்ளேட் எப்படி உள்ளது எனவும் கூறி செல்லவும்.

    Wednesday, April 13, 2011

    கல்லூரி & நட்பு

    கல்லூரி

    நான்கு வருட-இந்த 
    கல்லூரி வாழ்க்கையினை-ஒரு 
    நான்கு நிமிட பாடலாய் 
    நினைந்திடுவேன்! 

    நான்கு திசையெங்கும், 
    ஒலித்திடும் இந்த பாடல்
    நான்கு பேர் என்னைத் 
    தூக்கும் வரை தாலாட்டும்!! 

    கற்றதும், பெற்றதும் 
    பல இங்கு 
    எதுவும் மறப்பதற்க்கும் இல்லை 
    மறுப்பதற்க்கும் இல்லை !!!

    அன்பு; பண்பு; பாசம்; 
    துரோகம்;வெற்றி; 
    தோல்வி; நட்பு; காதல்; 
    இத்தோடு 
    பட்டியலிடாத பலவும் 
    எனக்கு நீ அளித்தாய்!!!! 
    எதற்காக என் மனதில்
    பாதரசமாய் தெளித்தாய் ?

    என் ஒவ்வொரு 
    நிமிடத்தின் நொடிகளிலும்
    நீ தந்த உறவுகள்
    என் நினைவை தாலாட்டும் !!!!!!!

    உன்னில் நான், 
    புன்னகைக்காத நாளில்லை
    இனி உன் நினைவன்று 
    கண்ணிமையில் கொஞ்சம் நீர் 
    வரா வேளையில்லை !!!!!!!!


    காலத்தின் கட்டாயத்தில் 
    பிரிகிறேன்
    என் லட்சியங்களுடன் வெற்றி 
    இணைய !!!!!!!!!
    ------------------------------------------------------------------

    நட்பு  

    நான் அழுவதற்க்கு,
    ஆயிரம் காரணம்!
    நான் சிரிக்க,
    ஒரே காரணம்
    என் நட்பு !!
    _கி.பி

    Friday, April 8, 2011

    !! யாதுமாகி நின்றாய் !!

     நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது (2006) மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியில் எழுதியது இது. நான் எழுதிய கவிதைகளில் சிறந்த ஒன்றாக நான் கருதுவது. தங்கள் கருத்துக்களை சொல்லிச் செல்லுங்கள்.  


    யாதுமாகி நின்றாய் 
    தமிழே நீ 
    யாதுமாகி நின்றாய் 

    எல்லாமாய் நின்று 
    எங்கள் வளர்ச்சிக்கு 
    உதவிய தமிழே 

    உன்னை
    தெய்வம் என்று
    பூஜிக்கின்றனர் 
    எதையும் உணராத 
    படமாய் மாற்றி!!

    அன்னை என்று 
    சொன்னர் மூவாயிரம் 
    ஆண்டு காலமாய்,
    இன்றோ  நீ 
    முதியோர் இல்லத்தில் !!

    மரங்களிடையே வீசும்
    தென்றல் என்று 
    சொல்லிச் சொல்லி 
     மரத்தையே வெட்டும் 
     மறத்தமிழன் ஆனோம் !!

    அமுது நீயாம் 
    அதைக் குடித்தவர் 
    புகழோடிருக்க 
    நீ மட்டும் 
    அழிந்து வருகிறாய் !! 

    உன்னை கன்னி 
    என்று அழைத்து 
    கடைசிவரை நீ 
    முதிர்கன்னியாகவே 
    இருந்து விட்டாய்!! 

    தெய்வம்; அன்னை; கன்னி; 
    தென்றல்; அமுது; என்று 
    யாதுமாகி நின்றாய் 
    இறுதியில் 
    இழிவுபட்டு நின்றாய் !! 

    இனியும் ஆடை,
    அணிகலன்களோடு
    இந்நாட்டினுள் வாராதே;
    அதையும் பறித்து 
    அம்மணமாக்கி விடுவான் 
    அனைத்தும் மறந்த 
    மறத்தமிழன் !!

    -கி.பி

    Friday, March 18, 2011

    படிப்புப் பயணம்

    பனிரெண்டாம் வகுப்பு:
    நாலை ஏழால் 
    வகுத்து-அதை 
    மூன்றால் கழித்து 
    எதையாவது 
    செய்து சொன்னேன், 
    சரியான விடையை!! 
    கல்லூரி:
    1+1= ? 
    தேடிக்கொண்டிருக்கிறேன் 
    கால்குலேட்டரை ....................... !!!!

    ---------------------------------------------------------------------------


    மாணவன் என்று 
    மகிழ்ச்சியாய்  நடந்தேன் 
    மூன்று நான்கு வருடம்............ 
    வருடங்கள் அவை கடந்தபின் 
    நான்கு நிமிடம் நடக்கக்கூட 
    மனம் இசையவில்லை 
    யாராவது கேட்டுவிட்டால்,
    "என்ன வேலை செய்ற?"

    __ கி.பி


    Sunday, February 27, 2011

    குழந்தையும் பெற்றோரும்


    எப்போதும் 
    சில குழந்தைகள் 
    எழுத்துக்களில் பிழை
    செய்கின்றனர் !
    சில பெற்றோர்
    எண்ணங்களில் பிழை
    செய்கின்றனர் !

    ------------------------------------------------------------------
    அப்போது
    எட்டு மணி வரை
    ஆடி,ஓடி விளையாடி
    உடலில் அடிபட்டு
    உறங்கின குழந்தைகள் !!!
    இப்போது
    எட்டு மணிக்கு
    வீட்டுக்கு வரும்
    பெற்றோரால்
    உள்ளத்தில் அடிபட்டு
    உறங்கவில்லை குழந்தைகள்!!!!
    ------------------------------------------------------------------
    ஆயிரம் ரூபாய்க்கு
    பொம்மை,
    கூட ஐநூறு போட்டு
    ஆடைகள்,
    எட்டாயிரம் போட்டு
    எடுப்பான நகைகள்,
    விளையாட கணினி,
    விருப்பமில்லா நடனம்!
    என எல்லாமே
    விலைக்கு கிடைக்கிறது
    இன்றைய குழந்தைக்கு!!
    விலையில்லா
    அன்பைத் தவிர


    -கி.பி 


    நன்றி

    "கவிதை என்பது"  வலைப்பூவை  வலைச்சரத்தில் அறிமுகம் செய்த நண்பர் philosophy prabhakaran அவர்களுக்கு  பலே பிரபு என்கிற கி.பி மற்றும் யோகா ஆகிய இருவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 
     
    கவனிக்க இங்கு கி.பி(கி.பிரபு) மற்றும் பலே பிரபு ஆகிய இரண்டும் நானே.



    Friday, February 11, 2011

    காதல் கொஞ்சம் காரம் கொஞ்சம்

    காதல்



    வேண்டாம் என்று 
    தூக்கிப்போட்ட 
    உன் நினைவுகளுக்குள் 
    இன்னும் தேடுகிறேன்
    என்னை!! 

    _ யோகா (என் தோழி)
    --------------------------------------------------------------------------

    காரம்


    காதலியை ஏமாற்றிய 
    காதலன்!!!
    காதலனை  ஏமாற்றிய 
    காதலி!!!
    மொத்தத்தில் 
    காதலை ஏமாற்றிய 
    காதலர்கள்!!!!

    காதலியை ஏமாற்றிய 
    காதலன்!!!
    காதலனை ஏமாற்றிய 
    காதலி!!!
    தற்கொலை செய்து 
     கொள்ள துடிக்கிறது 
    காதல்!!!!!

    ஏமாற்றப்படுவது 
    காதலனோ!! காதலியோ!!
    மட்டுமல்ல 
    ஒவ்வொரு 
    காதலும் தான்!!!

    _கி.பி 
    -----------------------------------------------------------------------

    Sunday, February 6, 2011

    ♥♥♥காதலோ காதல்♥♥♥



    காதல் மாதத்தில் கவிதை என்பதில் " காதல் என்பது".
    (எழுதாவிட்டால் கவிஞன் இல்லையோ) 
       தனித்தனியாய் அணியணியாய் 
    கவிதைகள் இங்கே !!!


    மன்னிச்சுடுங்க....♥
    மன்னிச்சுடுப்பா...♥
    மன்னிச்சுடுடா....♥
    ....................
    வளர்கிறது
    நம் காதல்
    உன் வார்த்தைகளில்♥


    உச்சரிக்கத் தெரியாத
    உன் வார்த்தைகளில்
    "அலகு"ம், "அளகு"ம்
    கூட,
    "அழகு" தான்♥♥♥


    யாராவது பாத்துட போறாங்க
    என கூறிக்கொண்டே
    என் கைகளை
    இறுக்கிப் பிடித்த
    உன் கைகளுக்குள்
    பதறுகிறது என் மனம்♥♥♥

    எத்தனை எழுதியபோதும்
    எல்லாம்
    ஆரம்பமாகவே!!
    உன்னைப் பற்றி
    என்பதால்♥♥♥ 



    முந்தைய நொடியில்
    அழகானவள்!
    அடுத்த நொடியில்
    பேரழகியானாள்!!
    காத்திருக்கிறேன்
    அடுத்த நிமிடத்துக்கு♥♥♥


    நீ ஆறுதல்
    சொல்வதாலேயே
    அடிக்கடி விழுகிறேன்
    எங்கிருந்தாவது♥♥♥


    தவிப்புகளை எல்லாம்
    தவிர்த்து விட்டு
    பேசச் சொன்ன
    அந்த நொடியில்
    கேட்கிறேன்,
    எனக்கே கூட
    கேட்காமல்
    நிலவு நீயா♥♥♥



    எத்தனை எழுத்துக்களில்
    கவிதை கேட்டபோதும்,
    உன் பெயரையே
    எழுதினேன்!!
    எழுத்துக்களை எண்ணாமல்
    உன்னை எண்ணியதால்♥♥♥ 



    இது கவிதையா??, ஜோக்கா??, கடியா??

    ஊடல் கொஞ்சம் உள்ள  காதலில்


    காதலி: என்மீது உன் காதல் எவ்வளவு?
    காதலன்: வானம் அளவு!
    காதலி: இது எல்லாரும் சொல்றது!
    காதலன்:கடலின் ஆழம்!
    காதலி: இத யார்தான் சொல்லல?
    காதலன்: பூமி அளவு
    காதலி: ச்சச்ச
    .
    .
    .
    .
    .
    காதலன்:ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு!!
    காதலி: அய்யோ ஐ லவ் யூ டா♥♥♥


    --
    ♥♥♥கி.பி♥♥♥

    Tuesday, February 1, 2011

    மறுஅங்கீகாரம்- நன்றி அதீதம்

    வணக்கம் நண்பர்களே. என்னுடைய கவிதை ஒன்று நமது "அதீதம்" இணைய இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. கடந்த 6  வருடங்களாக கவிதை எழுதுகிறேன். சில முறை தினகரனிலும், ஒரு முறை தினத்தந்தி "மாணவர் மலரிலும் " என் கவிதை வந்து உள்ளது. பின்னர் எந்த பத்திரிக்கைக்கும் நான் கவிதை எழுதி அனுப்பவில்லை. இப்போது தான் அனுப்பினேன்.கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்து ஒரு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. அதீதம் இணைய இதழுக்கு என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

    இந்த வெற்றிக்கு காரணமான, என்னை கவிஞன் ஆக்கிய என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.

    "அய்யா கவிதைகள் எத்தனை 
    நான் எழுதினாலும்-அத்தனையும்
    உங்கள் காலடியில் சமர்ப்பணம்"



    உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிச் செல்லவும். 

    Wednesday, January 26, 2011

    நெஞ்சம் பொறுக்குதில்லையே!!



    நெஞ்சம் பொறுக்குதில்லையே

    வணக்கம் நண்பர்களே இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

    இந்த கவிதை நான் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் போது(10.08.2005 அன்று) 16 வயதில்  சுதந்திர தினத்துக்கு எழுதி முதல் பரிசு பெற்றது.


    "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரின் நிலை கண்டு " என்பதன் ஈர்ப்பில் எழுதியது. எந்த மாற்றமும் செய்யாமல் இப்போது.



    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    அரசியல் எனும் பெயரில்
    அதை வியாபாரமாக்கி
    மக்களை ஏமாற்றும் சில
    கயவர் எண்ணம் கண்டு
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    பாலூட்டி சோறூட்டிய
    அன்னைக்கு இறுதியில்
    பால் ஊற்ற நினையாத
    சிலர் துரோகம் கண்டு,
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    குருதட்சணை கொடுக்க வழியின்றி
    படித்த பெண்ணிடம்
    வரதட்சணை கோரும்
    சில கயவர் நிலையால்,
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
     ஆன்மீகம் என்று சொல்லி
    அதை தொடராமல்
    மக்களை ஏமாற்றும்
    சிலர் மனம் கண்டு,
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    தன்மகன் பாஸ்மார்க்கா என்று
    அறியாமல், விடிந்தவுடன்
    டாஸ்மாக்கில் இருக்கும்
    குடிமகன் கண்டு,
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    ஊதியம் வாங்கும் கணவனை
    ஊக்கம் செய்யாமல்
    அழகுக்கும் ஆடம்பரத்துக்கும்
    ஆசை கொள்ளும் சில
    மாதர் மடமை கண்டு,
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    இன்றைய இளைஞர் பலர்
    இலட்சியம் எண்ணாமல்
    சினிமா நடிகைகளை
    எண்ணும் எண்ணத்தால்,
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    இன்றைய மாணவர் சிலர்
    கல்வியை நினையாமல்
    கலவியை நினையும்
    நிலை கண்டு
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    அன்னை நாட்டை நினையாமல்
    அண்டை நாட்டு மோகம்
    கொண்ட நம்
    அன்பர் சிலர் நிலை கண்டு
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!

                                                                                       _கி.பி

    Friday, January 14, 2011

    "ஜல்லி"க்கட்டு

    அடக்க வேண்டிய
    கொடுமைகள் ஆயிரமிருக்க,
    ஐந்தறிவு காளையினை
    அறிவே இல்லாமல்
    அடக்க நினைக்கும்
    தமிழனால்- இது
    "ஜல்லி"க்கட்டு  தான்!!


    வீர விளையாட்டாம் இது 
    நடத்த உரிமை கோரும்
    அரசியல்வாதி எவனும்- ஏன்
    அவன் மகனும் கூட
    கலந்தது இல்லை!- காயம்பட்டவன்,
    மரணம் கொண்டவன் எல்லாம்
    வேலைவெட்டி இல்லாத் தமிழன்!!