Pages

Sunday, February 27, 2011

குழந்தையும் பெற்றோரும்


எப்போதும் 
சில குழந்தைகள் 
எழுத்துக்களில் பிழை
செய்கின்றனர் !
சில பெற்றோர்
எண்ணங்களில் பிழை
செய்கின்றனர் !

------------------------------------------------------------------
அப்போது
எட்டு மணி வரை
ஆடி,ஓடி விளையாடி
உடலில் அடிபட்டு
உறங்கின குழந்தைகள் !!!
இப்போது
எட்டு மணிக்கு
வீட்டுக்கு வரும்
பெற்றோரால்
உள்ளத்தில் அடிபட்டு
உறங்கவில்லை குழந்தைகள்!!!!
------------------------------------------------------------------
ஆயிரம் ரூபாய்க்கு
பொம்மை,
கூட ஐநூறு போட்டு
ஆடைகள்,
எட்டாயிரம் போட்டு
எடுப்பான நகைகள்,
விளையாட கணினி,
விருப்பமில்லா நடனம்!
என எல்லாமே
விலைக்கு கிடைக்கிறது
இன்றைய குழந்தைக்கு!!
விலையில்லா
அன்பைத் தவிர


-கி.பி 


நன்றி

"கவிதை என்பது"  வலைப்பூவை  வலைச்சரத்தில் அறிமுகம் செய்த நண்பர் philosophy prabhakaran அவர்களுக்கு  பலே பிரபு என்கிற கி.பி மற்றும் யோகா ஆகிய இருவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 
 
கவனிக்க இங்கு கி.பி(கி.பிரபு) மற்றும் பலே பிரபு ஆகிய இரண்டும் நானே.



Friday, February 11, 2011

காதல் கொஞ்சம் காரம் கொஞ்சம்

காதல்



வேண்டாம் என்று 
தூக்கிப்போட்ட 
உன் நினைவுகளுக்குள் 
இன்னும் தேடுகிறேன்
என்னை!! 

_ யோகா (என் தோழி)
--------------------------------------------------------------------------

காரம்


காதலியை ஏமாற்றிய 
காதலன்!!!
காதலனை  ஏமாற்றிய 
காதலி!!!
மொத்தத்தில் 
காதலை ஏமாற்றிய 
காதலர்கள்!!!!

காதலியை ஏமாற்றிய 
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய 
காதலி!!!
தற்கொலை செய்து 
 கொள்ள துடிக்கிறது 
காதல்!!!!!

ஏமாற்றப்படுவது 
காதலனோ!! காதலியோ!!
மட்டுமல்ல 
ஒவ்வொரு 
காதலும் தான்!!!

_கி.பி 
-----------------------------------------------------------------------

Sunday, February 6, 2011

♥♥♥காதலோ காதல்♥♥♥



காதல் மாதத்தில் கவிதை என்பதில் " காதல் என்பது".
(எழுதாவிட்டால் கவிஞன் இல்லையோ) 
   தனித்தனியாய் அணியணியாய் 
கவிதைகள் இங்கே !!!


மன்னிச்சுடுங்க....♥
மன்னிச்சுடுப்பா...♥
மன்னிச்சுடுடா....♥
....................
வளர்கிறது
நம் காதல்
உன் வார்த்தைகளில்♥


உச்சரிக்கத் தெரியாத
உன் வார்த்தைகளில்
"அலகு"ம், "அளகு"ம்
கூட,
"அழகு" தான்♥♥♥


யாராவது பாத்துட போறாங்க
என கூறிக்கொண்டே
என் கைகளை
இறுக்கிப் பிடித்த
உன் கைகளுக்குள்
பதறுகிறது என் மனம்♥♥♥

எத்தனை எழுதியபோதும்
எல்லாம்
ஆரம்பமாகவே!!
உன்னைப் பற்றி
என்பதால்♥♥♥ 



முந்தைய நொடியில்
அழகானவள்!
அடுத்த நொடியில்
பேரழகியானாள்!!
காத்திருக்கிறேன்
அடுத்த நிமிடத்துக்கு♥♥♥


நீ ஆறுதல்
சொல்வதாலேயே
அடிக்கடி விழுகிறேன்
எங்கிருந்தாவது♥♥♥


தவிப்புகளை எல்லாம்
தவிர்த்து விட்டு
பேசச் சொன்ன
அந்த நொடியில்
கேட்கிறேன்,
எனக்கே கூட
கேட்காமல்
நிலவு நீயா♥♥♥



எத்தனை எழுத்துக்களில்
கவிதை கேட்டபோதும்,
உன் பெயரையே
எழுதினேன்!!
எழுத்துக்களை எண்ணாமல்
உன்னை எண்ணியதால்♥♥♥ 



இது கவிதையா??, ஜோக்கா??, கடியா??

ஊடல் கொஞ்சம் உள்ள  காதலில்


காதலி: என்மீது உன் காதல் எவ்வளவு?
காதலன்: வானம் அளவு!
காதலி: இது எல்லாரும் சொல்றது!
காதலன்:கடலின் ஆழம்!
காதலி: இத யார்தான் சொல்லல?
காதலன்: பூமி அளவு
காதலி: ச்சச்ச
.
.
.
.
.
காதலன்:ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு!!
காதலி: அய்யோ ஐ லவ் யூ டா♥♥♥


--
♥♥♥கி.பி♥♥♥

Tuesday, February 1, 2011

மறுஅங்கீகாரம்- நன்றி அதீதம்

வணக்கம் நண்பர்களே. என்னுடைய கவிதை ஒன்று நமது "அதீதம்" இணைய இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. கடந்த 6  வருடங்களாக கவிதை எழுதுகிறேன். சில முறை தினகரனிலும், ஒரு முறை தினத்தந்தி "மாணவர் மலரிலும் " என் கவிதை வந்து உள்ளது. பின்னர் எந்த பத்திரிக்கைக்கும் நான் கவிதை எழுதி அனுப்பவில்லை. இப்போது தான் அனுப்பினேன்.கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்து ஒரு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. அதீதம் இணைய இதழுக்கு என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

இந்த வெற்றிக்கு காரணமான, என்னை கவிஞன் ஆக்கிய என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.

"அய்யா கவிதைகள் எத்தனை 
நான் எழுதினாலும்-அத்தனையும்
உங்கள் காலடியில் சமர்ப்பணம்"



உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிச் செல்லவும்.