Pages

Monday, October 14, 2013

நீ - நான்



என்னை மிகவும் பிடிக்கும்
என்றாய்
எல்லோரும் என்னையே
பேசுவதாய், பார்ப்பதாய்
கூறினாய்
எல்லோரிலும் நல்லவன்
நான் என்றாய்
எப்போதும் தவறுகள்
செய்வதில்லை என்றாய்
நீ யார் என்றேன்
நீதான் என்றாய்

-பிரபு கிருஷ்ணா