Pages

Friday, September 30, 2011

புரிந்தது !

மாடர்ன் கவிதையென்றால் -எளிதில்
எவர்க்கும் புரியக்கூடாதாம்
எழுதிவிட்டுப் பார்த்தேன்
எனக்கே புரியவில்லை!

Thursday, September 29, 2011

என்னம்மா வேணும் செல்லம்?


என்னம்மா வேணும் செல்லம்? 
டெடிபியர் வேணுமா?
டோரா வேணுமா? 
நூடுல்ஸ் வேணுமா? 
ஜூஸ் வேணுமா? 
கன் வேணுமா? 
வீடியோ கேம் தரட்டா? 
புதுடிரஸ் போட்டுகிறியா? 
கடைசி வரை -சொல்லவிடவே 
இல்லை குழந்தையை 
அன்புதான் வேண்டுமென்று !

Thursday, September 22, 2011

நானும் இந்தியன்தானே !!


எல்லோரும் அண்ணாவை ஆதரித்தார்கள் 
நானும் ஆதரித்தேன்! 
எல்லோரும் அணு உலையை எதிர்க்கிறார்கள் 
நானும் எதிர்க்கிறேன் ! 
எல்லோருக்கும் மங்காத்தா சூப்பர் 
எனக்கும் சூப்பர் ! 
எல்லோரும் தூக்கு வேணாம்னாங்க 
நானும் வேணாம்னேன் ! 
எல்லோரும் சும்மா இருக்க 
நானும் சும்மா இருக்கேன் ! 
 ஏன் என்ற கேள்வி 
எல்லாம் கிடையாது
என்ன செய்ய 
நானும் இந்தியன்தானே !!