Pages

Monday, March 19, 2012

இனி சூரியன் போதுமே

சூரிய ஒளியில் மின்சாரத்துக்கு ஆகும் செலவு என்பது மற்றவற்றில் இருந்து இரண்டு மடங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் கிராமப்புற மக்கள் பயன்படுத்துவது இதுதான். அங்கு என்ன அம்பானியா இருக்கிறார்கள்? முன்னதாக தெருக்களில் எல்லாம் கூட இந்த வகை விளக்கை அமைத்தார்கள். இதற்கு ஆகும் முதலீடு மட்டுமே அதிகம்.மற்றபடி இதை பராமரிப்பது எளிது,அத்தோடு அதிக பின் விளைவு இல்லாத ஒன்று இதுவே.



மத்திய அரசே ஒரு திட்டம் அமைத்து இது குறித்த விழிப்புணர்வை ஓரளவிற்கு பரப்பி வருகிறது. இது நாம் காலத்தால் மறந்து விட்ட பொதிகை தொலைக்காட்சியில் கூட முன்னர் ஒளிபரப்பப்பட்டது. அதாவது ஒரு வீட்டுக்கு அடிப்படை மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய 5 லட்சம் ஆகும். இதில் அரசே மானியமாக இரண்டு லட்சம் வேறு தருகிறது.(30% மானியம்) மீதிக்கு வங்கி மூலம் கடன் பெறலாம். தனியொரு குடும்பத்துக்கு இது அதிகம் என்றாலும் அரசாங்கம் நினைத்தால் இது எளிது.

இது போக பல சாதனங்கள் சூரிய ஒளியில் இயங்கும் வண்ணம் வந்துவிட்டது. பெங்களூரு நகரில் பெரும்பாலும் சூரிய ஒளி மூலம் மட்டுமே வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுகிறது. இது போக பல இடங்களிலும் சூரிய ஒளியில் இயங்கும் அடுப்புகள் வந்து விட்டன.

Harish Hande என்ற கர்நாடக இளைஞர் செய்த முயற்சி இந்தியாவில் பிற்படுத்த பகுதிகளில் 120,000 வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைத்து உள்ளது. இவர் இந்த முயற்சிக்கு பெற்ற விருதுகள் ஏராளம். இவரின் முயற்சிகளை பின் தொடர்ந்தாலே நாம் சூரிய ஒளியில மின்சாரம் மூலம் தன்னிறைவு அடைய முடியும்.



சரியாக கூறுவது என்றால் 60 km x 60 km உள்ள இடத்தில் 1,00,000 MW மின்சாரம் நாம் உற்பத்தி செய்ய முடியும். இது எத்தனை நம் அணு உலைகளை விட பல மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள பாலைவனப் பகுதி மட்டும் 2,08,110 km. இதில் மட்டுமே நாம் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய இயலும்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் அணு உலை, அதன் விளைவுகள், கடல் நீர் பிரச்சினை, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது என எல்லாவற்றையும் நாம் யோசிக்க வேண்டும்.

நான் முன்னர் கூறியது போல தனியொரு குடும்பம், ஒரு அரசாங்கம் என எவர் வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதி உள்ளது தான் சூரிய ஒளியில் மின்சாரம். கைக்கடிகாரம் தொடங்கி, வாட்டர் ஹீட்டர் வரை வந்து நிற்கும் இந்த வசதி ஏன் வீடுகளுக்கு பயன்படுத்த முடியாது ?. ஒரு அரசு நினைத்தால் இதை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டுகளில் (2000 இல்) இருந்தததை விட Photo Voltaic(PV) cellவிலை இப்போது பாதி ஆகி விட்டது. அத்தோடு இதன் மூலம் மின்சாரத்தை நாம் சேமிக்க உதவும் லித்தியம் பாட்டரிகள் Recycle செய்யும் வண்ணம் இப்போது உருவாக்கப்படுகின்றன.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் ஆகும் என்றால் அரசு இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏனோ?

சூரிய ஒளி மின்சார முயற்சியும், வெற்றியும்: 




அணு மின்சாரத்திற்கு ஆரம்பத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம். அதை பராமரிக்க எவ்வளவு முதலில் அணு மின் கழிவுகளை எங்கு கொண்டு எறிய போகிறோம்? இதை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களும் செலவுகளும் எந்தக்கணக்கில் அடங்கும்? என்று அரசாங்கம் கணக்கிட்டால் சூரிய ஒளி மின் உற்பத்தி இதில் பாதி கூட வராது.

அணு உலை அமைக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி வேண்டும் என நிர்ணயிக்கும் அரசாங்கம்அதை உற்பத்தி செய்கிறதா? என்றால் இதுவரை இல்லை. ஆனால் செலவு மட்டும் பன்மடங்கு ஆகும்.

நாம் கையேந்தும் அமெரிக்கா கூட இந்த தொழில்நுட்பதுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தியாவில் இது பெரும்பாலும் தனியார்கள் கையில் மட்டுமே உள்ளது. நிலக்கரி மூலம் பெறப்படும் அனல்மின்சாரம் ரொம்ப நாள் வராது சூரிய ஒளி ஒன்றும் தீரக்கூடியது இல்லை.

பெங்களூரை சேர்ந்த ஒருவர் தன் வீடு முழுக்க இதை மட்டுமே பயன்படுத்துகிறார். பல்லாயிரம் கோடிகள் கொட்டி அணுமின் நிலையம் அமைப்பதை விட இதன் செலவு மிகவும் குறைவு. தனி மனிதருக்கான பார்வையில் மட்டுமே இதன் விலை அதிகம், ஆனால் ஒரு அரசு என்று வரும் போது இதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். 

தனியார் நிறுவனங்கள் இந்த தொழில் மூலம் கொழிக்கும் போது ஒரு அரசாங்கம் சப்பை காரணங்களை கூறி சமாளித்து வருகிறது. மக்கள் வாழ்க்கையில் விளையாடும் கூடங்குளம், தாராப்பூர் , கல்பாக்கம் என அத்தனை அணுஉலைகளையும் மூடி விட்டு, சூரியனில் கை வைத்தால் வரும் மின்சாரமே தன்னிறைவை தரும். 

Friday, March 2, 2012

காதலாய் இருப்போம்



நான் உனக்கானவன்
நீ எனக்காகவே ஆனவள் 

♥♥♥

இன்று காதலிப்போம் 
நாளை காதலாய் இருப்போம்

♥♥♥ 

முடிந்த பின்தான்
தொடங்குகிறது காதல் 

♥♥♥

நீ இருக்கும் நேரத்தில் 
உன்னை நினைக்கிறேன் 
நீ இல்லாத நேரத்தில் 
உன்னை மட்டுமே நினைக்கிறேன்

♥♥♥

நீ இல்லாத நான்
நானே இல்லாத நான்

♥♥♥

எப்போது என்னை வெறுப்பாய்
என்றாள்
நீ இறந்த பின்
என்னை விட்டு சென்றதற்காக
என்றேன்

♥♥♥


Thursday, March 1, 2012

குற்றம் பிறக்குமிடம்



உலகில் எல்லோரும்
நல்லவர்களான நாளில்
நான் மட்டும் தனியே
நடக்கிறேன் சாலையில்
ஆளே இல்லாத
சாலையில் எரிந்த
சிவப்பு விளக்கு
அணையக் காத்திருக்கிறது
அந்த கார்
நூறு மீட்டருக்கு
ஒரு குப்பைத் தொட்டி
ஐநூறு மீட்டருக்கு
ஒரு கழிவறையென
தந்திருந்தது அரசு
தூரத்தில் கும்பல்
அருகில் சென்றேன்
விபத்தில் காயமுற்ற
மனிதரைக் காப்பாற்ற
நான் நீயென போட்டி
அப்போதுதான் கவனித்தேன்
காலுக்கடியில் ஒரு பர்ஸ்
காயமடைந்த மனிதனின்
பணமாய் இருக்கலாம்
எடுத்து அதை
மெல்ல மறைக்கிறேன்