Pages

Wednesday, April 13, 2011

கல்லூரி & நட்பு

கல்லூரி

நான்கு வருட-இந்த 
கல்லூரி வாழ்க்கையினை-ஒரு 
நான்கு நிமிட பாடலாய் 
நினைந்திடுவேன்! 

நான்கு திசையெங்கும், 
ஒலித்திடும் இந்த பாடல்
நான்கு பேர் என்னைத் 
தூக்கும் வரை தாலாட்டும்!! 

கற்றதும், பெற்றதும் 
பல இங்கு 
எதுவும் மறப்பதற்க்கும் இல்லை 
மறுப்பதற்க்கும் இல்லை !!!

அன்பு; பண்பு; பாசம்; 
துரோகம்;வெற்றி; 
தோல்வி; நட்பு; காதல்; 
இத்தோடு 
பட்டியலிடாத பலவும் 
எனக்கு நீ அளித்தாய்!!!! 
எதற்காக என் மனதில்
பாதரசமாய் தெளித்தாய் ?

என் ஒவ்வொரு 
நிமிடத்தின் நொடிகளிலும்
நீ தந்த உறவுகள்
என் நினைவை தாலாட்டும் !!!!!!!

உன்னில் நான், 
புன்னகைக்காத நாளில்லை
இனி உன் நினைவன்று 
கண்ணிமையில் கொஞ்சம் நீர் 
வரா வேளையில்லை !!!!!!!!


காலத்தின் கட்டாயத்தில் 
பிரிகிறேன்
என் லட்சியங்களுடன் வெற்றி 
இணைய !!!!!!!!!
------------------------------------------------------------------

நட்பு  

நான் அழுவதற்க்கு,
ஆயிரம் காரணம்!
நான் சிரிக்க,
ஒரே காரணம்
என் நட்பு !!
_கி.பி

6 comments:

  1. நட்பு கவிதை சூப்பர்....

    ReplyDelete
  2. //நான்கு திசையெங்கும்,
    ஒலித்திடும் இந்த பாடல்
    நான்கு பேர் என்னைத்
    தூக்கும் வரை தாலாட்டும்!! //

    ம்ம்ம் தத்துவம் கவிதையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு என்னாச்சி...???

    ReplyDelete
  3. //நான்கு திசையெங்கும்,
    ஒலித்திடும் இந்த பாடல்
    நான்கு பேர் என்னைத்
    தூக்கும் வரை தாலாட்டும்!! //நட்பு கவிதை சூப்பர்....

    ReplyDelete
  4. கவிதை சூப்பர்

    ReplyDelete
  5. அன்பின் பிரபு - கல்லூரி நாட்கள் கனாக் காணும் நாட்கள் - அங்கு பூக்கும் நட்பு காலத்தால் மறையாது. சிந்தனை அருமை. கவிதை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete