Pages

Friday, February 10, 2012

பழுது படாத பாசம் - கவிதை

ஈகரை கவிதைப் போட்டி ஐந்தில் இரண்டாம் பரிசு பெற்ற என் கவிதை. மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்த ஈகரைக்கு என் நன்றிகள்.






எட்டணாவுக்கு பத்துதான் என
பதினொரு மிட்டாய் தந்த
பலகாரக் கடை பாட்டி !

அஞ்சு ரூபாய் அதிகம்
அப்புறம் வாங்கிக்கலாம் என
சிரித்த மளிகைக்கடை தாத்தா !

ஒண்ணே கால்கிலோ வருமென
ஒரு கிலோக்கு காசு வாங்கிய
காய்கறி விற்கும் ஆச்சி !

அடுத்தமுறை வருவேன் என
பனிரெண்டுக்கு பத்து வாங்கிய
முடி வெட்டும் பெரியவர்!

தாகத்துக்கு நீர் கேட்டால்
வெயிலுக்கு மோர் தந்த
என் வெள்ளந்தி அப்பாயி !

பழுது படாத பாசம்
பகிர்ந்த தலைமுறை இன்று
படங்களில் மட்டும் சிரிக்கிறது.


13 comments:

  1. அருமையான கவிதை சகோ.

    ReplyDelete
  2. ரொம்ப நெகிழ வைத்துவிட்டது !!

    அருமை

    வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  3. அன்பின் பிரபு - பழுது படாத பாசம் - கவிதைக்குப் பரிசு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. ”பழுது படாத பாசம்” கவிதை பரிசை அள்ளித் தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. உண்மையில் அருமையான கவிதை.வாழ்த்துகள் பிரபு !

    ReplyDelete
  6. உண்மைதான் பிரபு ...

    ReplyDelete
  7. உண்மையான வரிகள்.....அழகு கவிதை

    ReplyDelete
  8. மிகவும் உண்மையான வரிகள்....
    இவர்களை மறந்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் சென்று பொருள் வாங்கி அப்படி என்ன பெரிதாய் பெற்றோம்?

    //பழுது படாத பாசம்
    பகிர்ந்த தலைமுறை இன்று
    படங்களில் மட்டும் சிரிக்கிறது.//

    சில இடங்களில் படங்களையும் காணோம்!

    ReplyDelete
  9. படங்களில் மட்டும் சிரிக்கும் - பாசம் பகிர்ந்த தலைமுறை ........ நெகிழ்ச்சி பிரபு - இது தான் கவிதையின் நச்சென்ற முடிவு - பரிசுக்கும் காரணம் இதுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. தலைமுறைப் பதிவு பல தலைகளை திரும்பி பார்க்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை.

    ReplyDelete