Pages

Monday, January 21, 2013

கிளைகளின் கதை

நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக
நின்றிருந்து இன்று
வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின்
கிளைகள் ஒவ்வொன்றும்
தன் நினைவுகளை
பகிர ஆரம்பித்தன 
தன்னை கடித்த ஆடு 
கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் 
காதல் பேசிய சரவணன் துர்கா 
அழுது தீர்த்த செல்லம்மா 
திருடியதை புதைத்த கதிரவன் 
பிள்ளை பெற்ற லட்சுமி 
என எல்லா கிளைகளும் 
தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு 
மிச்சமிருந்த 
கடைசி கிளை 
எதுவும் சொல்லவில்லை 
அநேகமாய் அது 
வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும்

20/01/2013 திண்ணை இதழில் வெளியானது

2 comments: