Pages

Thursday, March 1, 2012

குற்றம் பிறக்குமிடம்



உலகில் எல்லோரும்
நல்லவர்களான நாளில்
நான் மட்டும் தனியே
நடக்கிறேன் சாலையில்
ஆளே இல்லாத
சாலையில் எரிந்த
சிவப்பு விளக்கு
அணையக் காத்திருக்கிறது
அந்த கார்
நூறு மீட்டருக்கு
ஒரு குப்பைத் தொட்டி
ஐநூறு மீட்டருக்கு
ஒரு கழிவறையென
தந்திருந்தது அரசு
தூரத்தில் கும்பல்
அருகில் சென்றேன்
விபத்தில் காயமுற்ற
மனிதரைக் காப்பாற்ற
நான் நீயென போட்டி
அப்போதுதான் கவனித்தேன்
காலுக்கடியில் ஒரு பர்ஸ்
காயமடைந்த மனிதனின்
பணமாய் இருக்கலாம்
எடுத்து அதை
மெல்ல மறைக்கிறேன்

1 comment:

  1. உலகில் எல்லோரும் நல்லவரானால் இப்படித்தான் நினைக்க தோன்றுமோ?

    ReplyDelete