Pages

Wednesday, December 29, 2010

எதிரும் புதிரும்

மாபெரும் நகரத்தில்
கால்கள் வலிக்க
அலைந்த பின்னும்
கழிப்பறை எதுவும்
இல்லாத வேளைதனில்,
ரோட்டோரத்தில்
கழிப்பதை தவிர
வேறென்ன செய்வான்
இந்த ஈனத் தமிழன்!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
இலவசங்கள் எல்லாம்
இளித்து பெறும்
எந்த தமிழனும் 
பயன்படுத்தவில்லை,
பேருந்து நிலையங்களின்
இலவச  கழிப்பிடத்தை!!!
வெளியில் கழிப்பதையே
ஐந்தாம் வேதமென
கொண்டுவிட்டான்!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                   _கி.பி

7 comments:

  1. நல்ல கவிதைகள், உங்களின் சமூக பார்வை வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிகவும் உண்மைதான். நல்ல கவிதை கொடுத்ததற்கு
    நன்றிகள்.

    ReplyDelete
  3. இலவச கழிப்பிடங்கள் இலவசமாய் நிறைய தருகின்றனவே.( நோய்கள், புதுப்புது வார்த்தைகள், தொலைபேசி எண்கள் )

    ReplyDelete
  4. நல்ல சமூதாய சிந்தனை... மாற்ற முயலுவோம்.

    ReplyDelete
  5. பேருந்து நிலைய இலவசக் கழிப்பறையா ? எந்த ஊரில் ? - காசு கொடுத்தாலும் பயன் படுத்தும் படியாகவா இருக்கிறது ? மூன்று ரூபாய் ?

    ReplyDelete
  6. ஓ ஏற்கனவே மறுமொழி இட்டிருக்கிறேனா ? பலே பலே

    ReplyDelete