Pages

Sunday, February 27, 2011

குழந்தையும் பெற்றோரும்


எப்போதும் 
சில குழந்தைகள் 
எழுத்துக்களில் பிழை
செய்கின்றனர் !
சில பெற்றோர்
எண்ணங்களில் பிழை
செய்கின்றனர் !

------------------------------------------------------------------
அப்போது
எட்டு மணி வரை
ஆடி,ஓடி விளையாடி
உடலில் அடிபட்டு
உறங்கின குழந்தைகள் !!!
இப்போது
எட்டு மணிக்கு
வீட்டுக்கு வரும்
பெற்றோரால்
உள்ளத்தில் அடிபட்டு
உறங்கவில்லை குழந்தைகள்!!!!
------------------------------------------------------------------
ஆயிரம் ரூபாய்க்கு
பொம்மை,
கூட ஐநூறு போட்டு
ஆடைகள்,
எட்டாயிரம் போட்டு
எடுப்பான நகைகள்,
விளையாட கணினி,
விருப்பமில்லா நடனம்!
என எல்லாமே
விலைக்கு கிடைக்கிறது
இன்றைய குழந்தைக்கு!!
விலையில்லா
அன்பைத் தவிர


-கி.பி 


நன்றி

"கவிதை என்பது"  வலைப்பூவை  வலைச்சரத்தில் அறிமுகம் செய்த நண்பர் philosophy prabhakaran அவர்களுக்கு  பலே பிரபு என்கிற கி.பி மற்றும் யோகா ஆகிய இருவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 
 
கவனிக்க இங்கு கி.பி(கி.பிரபு) மற்றும் பலே பிரபு ஆகிய இரண்டும் நானே.



8 comments:

  1. வீட்டுக்கு வரும்
    பெற்றோரால்
    உள்ளத்தில் அடிபட்டு
    உறங்கவில்லை குழந்தைகள்!!!!

    அருமை பிரபு... சூப்பர்

    ReplyDelete
  2. //என எல்லாமே
    விலைக்கு கிடைக்கிறது
    இன்றைய குழந்தைக்கு!!
    விலையில்லா
    அன்பைத் தவிர//

    இன்றைய குழந்தைகளின் நிலைமை இதுதான்...

    நல்லா எழுதியிருக்க பிரபு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. //விலையில்லா
    அன்பைத் தவிர//


    உருவ குத்தும் வரிகள்....

    ReplyDelete
  4. மூன்று பகுதிகளாக பிரித்துக்காட்டியிருந்தாலும், ஒரே விஷயத்தை பேசி, மனதை உறுத்துகிறது உங்களது வார்த்தைகள்.. யோசிக்கவும், ரசிகக்கவும் வைக்கிறது.

    ReplyDelete
  5. இன்றய குழந்தைகளின் உண்மை நிலையினை அழகாக கூறிவிட்டீர்கள். அருமை ரசித்தேன்.

    ReplyDelete
  6. ரசிக்க வைக்கிறது உங்கள் கவிதை!!

    வருகை தாருங்கள் "நந்தலாலா" இணைய இதழுக்கு!!

    ReplyDelete
  7. அன்பின் பிரபு - சிந்தனை அருமை - இதுதான் இன்றைய யதார்த்த நிலை. என்ன செய்வது ..... விலையில்லா அன்பு - உள்ளத்தில் அடிபட்டு உறங்காத குழந்தைகள் - அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை....... நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. அன்பின் பிரபு / யோகா - அததனையும் அருமை - காதல் தோல்வியினை அழகாக விளக்கும் கவிதைகள் -வாழ்க காதலுடன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete