Pages

Wednesday, December 28, 2011

இ(செ)யற்கை

காடுகளை அழித்த 
நகரத்தில் பார்க் !

அருவி இருந்த இடத்தில் 
தீம் பார்க் !

ஆறு இருந்த இடத்தில் 
 சாக்கடை !

மரங்களை வெட்டி 
மலர்ந்த வீட்டில் 
சீனரி ஓவியம் !

நடக்க முடிகிற இடத்துக்கும் 
நான்கு சக்கர வாகனம் !

நேரில் பேசக் கூடிய 
தொலைவுக்கும் அலைபேசி 

இருப்பதை எல்லாம் 
அழித்து விட்டு 
உருவானது செயற்கை !

இருந்த இடமே தெரியாமல் 
அழித்து விட்டு 
உருவாகும் இயற்கை !









1 comment:

  1. உங்கள் பின்னூட்டத்தைப் பின்பற்றி வந்தேன்..

    மிகமிக அருமையான...செருப்படிக் கவிதை!! சூப்பர்...!!

    //இருப்பதை எல்லாம்
    அழித்து விட்டு
    உருவானது செயற்கை !

    இருந்த இடமே தெரியாமல்
    அழித்து விட்டு
    உருவாகும் இயற்கை !//

    இந்த வரிகள் மிகமிக அருமை!

    வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete