Pages

Monday, December 28, 2009

வாழ்க்கைச்சூடி

அன்பு கொண்டு
ஆறறிவு பெற்று
இறுமாப்பு கொள்ளாமல்
ஈதல் செய்து
உலகம் போற்ற
ஊர் பாராட்ட
எண்ணிச் செயல்பட்டால்
ஏற்றம் உண்டென்பதை
ஐயந்திரிபுற உணர்ந்து
ஒருபோதும் தோல்வியின்றி
ஓதலை விட்டுவிடாமல்
ஒளவை நெறிப்படி வாழ்ந்து
எஃகு போல் மனம் கொள்ளல் வேண்டும்

1 comment:

  1. அருமையான வாழ்க்கைச் சூடி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete